கோவையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு..!

ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைத்து, சரிபார்க்கப்ப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது.


கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று (மார்ச்.20) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 



10 தொகுதிகளுக்கு தேவையான 3719 வாக்கு பதிவு இயந்திரங்கள், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4026 விவி பேட் இயந்திரங்கள் என 11,464 வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. 



ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கப்ப்படுகிறது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. 

அதே போல, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...