தொண்டாமுத்தூரில் சீராக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கபடவில்லை என குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோர் 15 பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, வறட்சியான சூழ்நிலை மற்றும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் தண்ணீர் விநியோகிக்க போதுமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திறகு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...