வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற 7 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில சமயம் யானை மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதை வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகம் அதிகாரிகள் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வழியாக ஏழு காட்டு யானைகள் நடந்து வந்து பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்றது.



எதிரே வந்த வாகனம் ஓட்டுநர்கள் பயந்து திருப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சாராக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். திடீரென்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...