காங்கேயத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ – தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காலி மனைகளாக உள்ளது.

இந்த நிலம் முழுவதும் காய்ந்த புற்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீ பரவி குடியிருப்புக்குள் வராமல் தடுக்க உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த வறண்ட காய்ந்த நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்‌.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...