புளியமரத்தப்பட்டி பகுதியில் காற்றாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள

சின்னப்புத்தூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புளியமரத்துப்பட்டி பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் காற்றாலைகளை நிறுவி காற்றின் மூலம் மின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் (windFarm) மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் ஒரு காற்றாலையில் தீ பிடித்து உள்ள நிலையில், தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது.



இரண்டு கிளைகள்(விசிறிகள்) கோபுரத்தில் இருந்து கீழே விழும் தருவாயில் தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...