ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலுக்கு இரண்டாவது முறையாக டாக்டர். பி.சி ராய் தேசிய விருது


கோவை, ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவரும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் உலகப்புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் சி.பழனிவேலுக்கு 2015ம் ஆண்டு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி ராய் தேசிய விருது வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக சிறந்த மருத்துவர் என்ற முறையில் இந்த ஆண்டும் டாக்டர். பி.சி ராய் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



இதன்மூலம் இவ்விருதை இரண்டு முறை மருத்துவத்துறைக்காக குடியரசுத் தலைவரிடம் பெற்ற முதல் மருத்துவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவில் முதன்முதலில் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையை 2001ம் ஆண்டு இவர் அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, இத்துறையில் இவர் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பல பரிசுகளை பெற்றர். 

இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கியநாடுகள், கொரியா, சீனா போன்ற மேலும் பல நாடுகளிலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை செய்து காண்பித்ததோடு , அதை கற்றுக்கொடுக்கும் சிறந்த மருத்துவராவார். மேலும், 'உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடுவோம்' என்ற சமூக அமைப்பை நிறுவி, கோவை ரோட்டரி கிளப் உடன் இணைந்து ஏழை மக்களுக்கு 'கேர் ஃபார் லைஃப்' என்ற திட்டத்தின் மூலம் குடல் சார்ந்த புற்றுநோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், தென்னிந்தியாவில் நான்கு பேருக்கு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி விருதுகள் வழங்கி வருகிறது. அதுபோல் மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், உலக மருத்துவர் தினம் ஜுலை 7ம் தேதி உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திய அரசு டாக்டர். பி.சி, ராய் பிறந்த தினமான ஜுலை 1ம் தேதி இந்தியாவில் மருத்துவர் தினம் கொண்டாடுகிறது. இந்தியாவில் 2001ம் ஆண்டில் ஜெம் மருத்துவமனை லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டு இன்றுவரை பல சாதனைகளை புரிந்துள்ளது.

இதன் மூலம் இந்த உயரிய மருத்துவதிற்கான விருது இரண்டு முறை கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இது நம்பிக்கை மற்றும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...