கோவை, ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவரும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் உலகப்புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் சி.பழனிவேலுக்கு 2015ம் ஆண்டு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி ராய் தேசிய விருது வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக சிறந்த மருத்துவர் என்ற முறையில் இந்த ஆண்டும் டாக்டர். பி.சி ராய் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இவ்விருதை இரண்டு முறை மருத்துவத்துறைக்காக குடியரசுத் தலைவரிடம் பெற்ற முதல் மருத்துவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவில் முதன்முதலில் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையை 2001ம் ஆண்டு இவர் அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, இத்துறையில் இவர் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பல பரிசுகளை பெற்றர்.
இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கியநாடுகள், கொரியா, சீனா போன்ற மேலும் பல நாடுகளிலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை செய்து காண்பித்ததோடு , அதை கற்றுக்கொடுக்கும் சிறந்த மருத்துவராவார். மேலும், 'உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடுவோம்' என்ற சமூக அமைப்பை நிறுவி, கோவை ரோட்டரி கிளப் உடன் இணைந்து ஏழை மக்களுக்கு 'கேர் ஃபார் லைஃப்' என்ற திட்டத்தின் மூலம் குடல் சார்ந்த புற்றுநோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், தென்னிந்தியாவில் நான்கு பேருக்கு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி விருதுகள் வழங்கி வருகிறது. அதுபோல் மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்படுவதாக கூறினார்.
மேலும், உலக மருத்துவர் தினம் ஜுலை 7ம் தேதி உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திய அரசு டாக்டர். பி.சி, ராய் பிறந்த தினமான ஜுலை 1ம் தேதி இந்தியாவில் மருத்துவர் தினம் கொண்டாடுகிறது. இந்தியாவில் 2001ம் ஆண்டில் ஜெம் மருத்துவமனை லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டு இன்றுவரை பல சாதனைகளை புரிந்துள்ளது.
இதன் மூலம் இந்த உயரிய மருத்துவதிற்கான விருது இரண்டு முறை கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இது நம்பிக்கை மற்றும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.