பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் உலாவும் காட்டெருமை – கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை

இன்று காலையில் டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் பாதிவழியிலேயே நிற்க நேரிட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் கடக்க முடியாமல் நின்றது. இதனால் இவ்வழியாக பயணிக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்குவோ செல்பி எடுக்கவோ அருகில் சென்று தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் கவனமாக வன பாதையை கடக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...