கோவை கோவில்பாளையத்தில் இரத்தினம் கல்லூரி துவக்கம்

கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் கல்லூரி துவக்க விழாவில் பேசினார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் இரா.மாணிக்கம், இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் பா.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் பேசுகையில், இந்த கல்வி வளாகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கட்டிடடவியல் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனும், பல பிரச்சனைகளுக்கு பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் திறனும் மேம்படும் என்றும், இந்த கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று கூறினார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...