கோவை தொப்பம்பட்டியில் நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணியினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை தவறாக பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்புவின் உருவ படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும், பின்பு தீயிட்டு கொழுத்தியும் திமுக மகளிர் அணியினர் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் கோவை வடக்கு திமுக மகளிர் அணி மற்றும் திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பிரிவு அருகே கோவை வடக்கு மாவட்டம் தி.மு.க மகளிர் அணி மற்றும் திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கோசங்களை எழுப்பியும் அவரது திரு உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அணி அமைப்பாளர் ரங்கநாயகி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பாளர்களாக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு கவுன்சிலர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களை தவறாக பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக பெண்கள் கோசங்களை எழுப்பினர்.



தொடர்ந்து குஷ்புவின் உருவ படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும், தீயிட்டு கொழுத்தியும், குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.



அப்போது அங்கு இருந்த போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணியைச் சேர்ந்த சுகந்தி, ஜீலா, சித்ரா, சாவித்திரி, பத்ரிபிரியா, ராதா, பர்வீனா, சங்கீத பிரியா, ராணி, வசந்த பிரியா, கண்ணகி, அமுதா, மஞ்சுளா, பத்மாவதி, சரஸ்வதி, ஆனந்தி, அமிர்தா, தேவகி, சரோஜினி, பங்கஜம், செல்வி, சித்ரா, கௌசல்யா, விஜயலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக் கலந்துக்கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...