உடுமலை அருகே கொழுமம் சோதனை சாவடி பகுதியில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

இரவு மற்றும் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பழனி சாலையில் கொழுமம் சோதனை சுவாடி அருகில் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முதலை ஒன்று சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து அமராவதி நகர் முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதற்கிடையில் இப்பகுதிகள் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கொழுமம் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...