பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89க்குட்பட்ட பி.என்.டி.காலனி சமீம் கார்டன் மற்றும் ஜூடிசில் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ..20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.



தொடர்ந்து, வார்டு எண்.89க்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங்யூனிட் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச்சாலை அமைப்பது குறித்தும் மற்றும் வார்டு எண்.100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்தும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் எஸ்.எஸ்.கார்டன் முதல் செந்தமிழ் நகர் வரை பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் மஞ்சிப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் துவக்கி வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பாபு, செந்தில்குமார், முருகேசன், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, சக்திவேல், நாசர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...