ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு - உடுமலை ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் ஆண்டு மாணவியர் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் முதல்வர் தவசிமணி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் நவநீதன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை தலைமை பேராசிரியர் முனைவர் மணிமேகலை, வடிவு, கனக துர்கா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...