திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு எதிராக பாஜக மற்றும் அதிமுகவினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாசல் பகுதி இல்லாமல் போகும் என பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், ஆனால் வாசல் பகுதிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் புறம்போக்கு இடத்தில் ஆரம்ப மையம் கட்டுவதாகவும், அரசியல் சூழ்ச்சி காரணமாகவும் திமுக விற்கு பெயர் வந்துவிடும் என்பதால் பாஜக, அதிமுகவினர் திட்டமிட்டு பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டி இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப மையம் குறித்த வரைபடத்தை பதாகையாக வைத்து ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஈடுபட்டனர்.



இடுவம்பாளையம் பகுதியில் அவசர உதவிக்கு 5 கிலோமீட்டர் அப்பால் செல்ல வேண்டிய நிலையில் ஆரம்ப மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...