காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.

அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...