கோவை பெரியநாயக்கன்பாளையம் புதிய மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: தேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிற வகையிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.11) துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் J. ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி. கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல் தலைவர்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் புவனேஸ்வரன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இதேபோல 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், இவற்றை உள்ளடக்கி 3200 கோடி ரூபாய் மதிப்பிலானபணி நிறைவடைந்தவற்றை திறந்து வைத்ததோடு, அடிக்கலும் நாட்டினார்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 112 நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...