குருக்கம்பாளையத்தில் 10 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருக்கம்பாளைய ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் குருக்கம்பாளையத்தில் ஸ்ரீ பட்டாசு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் சுந்தரம் என்பவரின் தாத்தா தர்மகத்தாவாக 3 தலைமுறையாக கோவிலில் படைக்கலம் எடுத்து பூஜை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் கோவில் நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை. அப்போது ஊரைச் சேர்ந்த அம்மாசை என்பவர் கவனித்து வந்தார். தற்போது அம்மாசை கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்த முயற்சித்து வருகிறார்.



தற்போது 3 தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களையும் அவருக்களுக்கு ஆதரவாக இருந்த 10 குடும்பத்தினரையும் அம்மாசை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவிட்டால் ஓட்டு அட்டையை திரும்ப தர போதவாக தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...