காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் - பெண் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சி

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த மகளிர் தினவிழாவில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடனப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்கப் பெற்றனர். மேலும் நீதிபதிகள் பெண்களின் சிறப்புகள் குறித்து அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.



மேலும் பொதுவாழ்க்கையில் பெண்கள் இடையூறுகள் இருந்து எவ்வாறு முன்னேறி வெற்றி அடைவது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் மகளிர் தினவிழாக்கள் நடைபெறுவது பெண்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு ஒரு உந்துகோலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...