தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று நீதிபதி தர்ம பிரபு கூறினார்.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து மகளிர் தின விழா தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கி பேசினர்.

இவர் பேசும் போது மகளிர் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவது போற்றக்கூடியது. மேலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணின் பங்கு உறியது பெண்மையை போற்றுவோம் என்றார்.

மேலும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு பேசுகையில், பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று கூறினார். இதில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன், ராமசாமி, தங்கராஜ், மணிவண்ணன், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினர்.



விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று மற்றும் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உறுதுணையாக செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



சுமார் பெண் ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் தாராபுரம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...