கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் நவீன ஸ்கூட்டர்கள்

விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை விமான நிலையம் திகழ்கிறது. இங்கு இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.

கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க கோவை விமான நிலையத்தை தூய்மையாக வைக்கவும் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உத்தரவின் பேரில் விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தரையில் கிடக்கும் குப்பை மற்றும் மண்ணை அகற்றும் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள அலங்கார கண்ணாடி உள்ளிட்ட உயரமான இடங்களை சுத்தம் செய்ய நவீன ஹைட்ராலிக் பேட்டரி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தை தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிக்காக சாலையில் இயக்கும் பேட்டரி ஸ்கூட்டர் போன்று 2 நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் அண்மையில் வாங்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் சுத்தம் செய்யும் மாப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு ஸ்கூட்டர் வாகனத்தை இயக்கி சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நேற்று முன்தினம் (மார்ச்.6) முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விமான நிலையத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் முக்கியம். எனவே விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மாலை நேரத்தில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...