கோவை மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது. இந்த பழப்பண்ணையில் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்து வந்தனர். இதனால் குறைந்த பொருட்செலவில் ரம்மியமான, இதமான சூழலை ரசிக்க கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் (மார்ச்.6) அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று ஆர்வத்துடன் கல்லாறு பழப்பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...