அப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.14.60 லட்சத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணி - மேயர் கல்பனா தொடங்கி வைப்பு

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து பாராமரிப்பு பணியை தொடங்கி வைத்து பழுதடைந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி 1வது வார்டில் அரிஜன காலனி பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் உள்ளது. இது தற்போது கதவுகள் உடைந்து பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பழுதடைந்திருந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சித்ராதங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபாகரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, அதிகாரிகள் எழில், ஜெயின்ராஜ், ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், மற்றும் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க – வில் இருந்து லோகநாதன், தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜா, மகேஸ்வரன், திமுக கட்சி நிர்வாகிகள் சம்பத்குமார், வெங்கடேஷ், ஜெயக்குமார், சின்னச்சாமி, காளிமுத்துசாமி, சண்முகசுந்தரம், ஆனந்தன், ராஜ்கண்ணன், தமிழ்நிதி, லட்சுமணன், சின்னு, கார்த்திக், சாம்ராஜ், இளைஞரணி நிரிவாகிகள் சுபாஷ்கண்ணன், ஜெய்பிரகாஷ், ஆனந்தன், ஜீவானந்தம், அஜய்ஹரிகரன், அன்பு, தங்கராஜ், திவாகர், தீபக், மோகன், மதன், அரவிந்த் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...