கோவை தடாகம் பகுதிகளில் உள்ள சேம்பர்களில் தொடர்ந்து பழைய இரும்புகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சோமயனூர் MNK செந்தில் ஆகியோரின் சேம்பரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருட்டுபோனது.

இதைத்தொடர்ந்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அந்தோணி காவலர்கள் முனீஸ், ஜனா, பூபதி, கார்த்தி மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு காவலர் செல்லகண்ணன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இதில் சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த வாகனம் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது தடாகம் பகுதியில் உள்ள 12 CCTV camera மூலம் கண்டறிந்து இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் 500 கிலோ இரும்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...