ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 15.78 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஏலத்தில் கடந்த வாரத்தை விட 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம் 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. நேற்று (மார்ச்.5) கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

முதல் தர கொப்பரை 222 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 80 ரூபாய் முதல், 82.55 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 264 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 40 முதல், 71 ரூபாய் வரை விலை கிடைத்தது.

மொத்தம், 486 கொப்பரை மூட்டைகளை, 72 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட, 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம், 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...