டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு - விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அழைப்பு

கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV (GROUP IV)ல் 6244 பணிக்காலியிடங்களுக்கான தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.02.2024 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் TNPSC Group IV தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் வாயிலாக 09.03.2024 (சனிக்கிழமை) அன்று மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தங்களது TNPSC Group IV Application form நகலுடன் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள் நடைபெறவுள்ள இலவச மாதிரித் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மனுதாரர்கள் https://forms.gle/g8LgcvT4XjroSc1PA என்ற Google form வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும், அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு, பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...