கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-20, 27, 32 ஆகியவற்றில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை இன்று (மார்ச்.4) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு 2024-க்கு பயிற்சி வகுப்புகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-03 மற்றும் 33-ல் ரூ-52.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பறையை பொதுமக்ள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார். மேலும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...