பொள்ளாச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி வெங்கட்ரமணன் பள்ளி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



அவர்களை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என கூறினார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ராகுல் காந்தி நடைபயணத்துக்கு பிறகு எழுச்சியோடு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...