பொள்ளாச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி வெங்கட்ரமணன் பள்ளி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



அவர்களை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என கூறினார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ராகுல் காந்தி நடைபயணத்துக்கு பிறகு எழுச்சியோடு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...