தாராபுரத்தில் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேனர் கிழிப்பு

அண்ணா சிலை பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். பேனரில் முதலமைச்சரின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படத்தையும் மர்ம நபர்கள் கிழித்து விட்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க‌.ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71, ஆவது பிறந்தநாள் விழா நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் நேற்று மாலை 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே.எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.எஸ்.தனசேகர் ஒரு அணியினராகவும், தற்போதைய தாராபுரம் நகர செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் மற்றொரு அணியாகவும். இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 7 மாத காலமாக கருத்து வேறுபாடுடன் கட்சிப் பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...