விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து ஏமாற்றியதாக 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்

கோவை வடவள்ளியில் விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்த நிறுவனத்திடம் வீடு வாங்கி ஏமாந்தத 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.


கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3௦ க்கும் மேற்பட்டோர் வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இந்நிலையில் அந்த நிறுவனம் விதிகளை மீறி கட்டிடம் கட்டி விற்பனை செய்துள்ளதாகவும், நிறுவனம் செய்த தவறால் தங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகவும் வீடுகளை வாங்கியவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அடிக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொடுத்த தக்‌ஷா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி நிர்வாகம்  மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையிலும் தக்‌ஷா நிறுவன தரப்பின்னர் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த  குடியிருப்புவாசிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனவும், மின் கட்டணத்திற்கு கூடுதலாக வரி என்ற பெயரில் வசூல் செய்வதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்த மனுவினை ஆட்சியரிடம் அளித்த அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...