உருமாண்டம்பாளையத்தில் பாழடைந்து கிடக்கும் மயானத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை

உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை அங்குள்ள மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோவை: கோவை உருமாண்டம்பாளையத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஊருக்குள் இறக்கும் அனைத்து ஜாதியினரும் புதைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் எரியுட்டும் மேடையும் உள்ளது. இந்தநிலையில் உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை இந்த மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



தற்போது இந்த மயானத்தில் சுமார் 5 அடிக்கும் மேலாக விஷ செடிகள், முற்கள், புல்கள் வளர்த்துள்ளன. மயானத்தின் தண்ணீர் பைப்புகள், மின்சார விளக்குகள் சரியாக வேலைகள் செய்யவில்லை. சவ வண்டிகளும் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளன.

இதேபோல வெள்ளகிணர் மயானமும் பாழடைந்து காணப்படுகின்றன. அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக பொதுகழிப்பிடம் இருந்தும் கழிப்பிடம் செல்லாமல் மயானத்திற்கே வருகின்றனர். மேலும் இந்த மயானம் கேட் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வழிப்பாதையும் சரியாக இல்லை, பல நேரங்களில் இரவு நேரத்தில் தான் இறப்பவர்களை புதைக்க கொண்டுவருகின்றனர். இங்கு பாம்பு, பல்லிகள் அதிகம் சுற்றுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல உள்ள அனைத்து மயானங்களையும் பராமரிக்க வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...