கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம்இன்று நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை ஒட்டி தினமும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான்று இன்று தேரோட்டம் நடைபெற்றது. இது ஒட்டி இன்று காலை நாலு மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள் நடைபெற்றது.

பிறகுமதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

இதில் முக்கிய பெருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டன. கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கற்பகம் கல்லூரி வீதி, வைசால் வீதி, எம்பட்டி காலனி, உக்கடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே பொதுமக்களுக்கு உணவு வகைகள், நீர் மோர் என பல வகைகள் கொடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல் முன்புறம் பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்தனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...