டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது – பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி பேட்டி

மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அவர், திருப்பூர் போன்ற நகரங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாததன் காரணமாக தொழில் செய்பவர்கள் எல்லாம் இப்பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டதால் வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது.

மேலும் தென்னை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொப்பரையை பாரத் ஆயிலாக மாற்றி சந்தை படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...