ஐயப்பன் சுவாமி கோவிலில் பார்வையாளர்களை கவர்ந்த 'நாட்டிய சிலை' நடனம்

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் 48வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வரை ஆறாட்டு திருவீதி உலாவுடன் இவ்விழா நிறைவடையவுள்ளது.



கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.



திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...