வீரபாண்டி பேரூராட்சியில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி - ஒருவர் படுகாயம்

வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மாரிமுத்து என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...