தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் தாண்டி, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே வளாகங்களில் உள்ள 25000 வோல்ட் மின்சக்தி அமைப்புகளின் அருகில் செல்வதால் மின்சாரம் தாக்கி விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. 2017ம் ஆண்டில், சேலம் மார்க்கெட் ரயில்நிலையம் மற்றும் மேட்டூர் அணை ரயில்நிலையங்களில் இத்தகைய இரு மின்விபத்துக்களில் இருவர் சிக்கி மின்அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

எனவே, இத்தகு விபத்துகளை தவிர்க்கவும், ரயில்வே மின்அமைப்புகளின் அருகில் செல்வதில் உள்ள அபாயத்தை விளக்கியும், சேலம் கோட்ட மின்பிரிவு 28.03.2017 முதல் 31.03.2017 வரை மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (28.03.2017) காலை சுமார் 10.00 மணியளவில் சேலம் கோட்ட அலுவலகத்தில் இருந்து மின்பாதுகாப்பு பிரச்சார ஊர்தியை (பாதுகாப்பு ரதம்) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இப்பிரச்சார ஊர்தி மூலம் சுமார் 1,00,000 பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 2500 கேலண்டர்களை விநியோகிக்கவும், பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 1000 ஜியோமெட்ரி பாக்ஸ்களை பள்ளிக்குழந்தைகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...