முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலையில் அன்னதானம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல பெரிய கோட்டை ஊராட்சி அய்யலுமீனாட்சி நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.

பின்னர் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . அப்போது முதியவர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியாக உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

உடுமலை போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கவேல், உடுமலை கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ரத்தினசாமி, கதிர்வேல், முத்துசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வராஜ், பெரியகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் செயலாளர் ,நாகராஜ் மாவட்ட இணை செயலாளர் மகேஷ் குமார், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சீனிவாச பிரபு, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் இளம்பிறை சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...