கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி ஆணையாளருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதி கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி சீர் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பதியில் உப்பு தண்ணீருக்காக தோன்றிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தோன்றிய பள்ளங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இதனையும் கருத்தில் கொண்டு சரி செய்து தருமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...