முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினர்.


கோவை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதே போல் வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த செ.தாமோதரன் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மதுக்கரை நகரச் செயலாளர் சண்முகராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, காந்திநகர் கிளைச் செயலாளர் சிவலிங்கம், கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கார்த்திக், மகேஷ் குமார், மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...