கோவை பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றம் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் கோவையில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோவையில் காலை 5.45 மணிக்கு கோவை-பெங்களூரு உதய் ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் அமைப்புகள், பயணிகள் சங்கத்தினா் சார்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும். 8.03 மணிக்கு திருப்பூா், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32-க்கு சேலம், 10.51-க்கு தருமபுரி, 12.03-க்கு ஓசூா், பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மீண்டும் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 3.10 மணிக்கு ஓசூா், 4.22 மணிக்கு தருமபுரி, 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூா், இரவு 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...