பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் குண்டம் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.



பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...