ஆனைமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்

ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரடியாக ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை, சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை, ஆனைமலை பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.21) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடி மையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.



ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை, நடைபெற்ற மகப்பேறு ஆகியன குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.



இதேபோல, ஆனைமலை வட்டம் பகுதியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயக்குடி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தினை, கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி, நேற்று (பிப்.21) தொடங்கி வைத்தார்.



இதேபோல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சுரேஷ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...