உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களின் வீடியோ வைரல்

கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுவதால், குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஊராட்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியை சுற்றி ஏராளமான நூற்பாலைகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையிடம் பொதுமக்கள் தரப்பில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரியும் மர்மநபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அனுப்பியும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். கடற்கரையில் மர்ம நபர் திருட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...