மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 50 பணிகளும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 250 கி.மீ அளவிற்கு நீர்வரத்துக் கால்வாய்களையும், ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம், நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (ஆழியாறு) யின் மூலம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வரத்து கால்வாய்கள் குடிமராமத்துப்பபணிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தவறியதால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



வருங்காலத்தில் நீர்நிலைகளை புணரமைத்து தண்ணீர் தேக்கி வைத்திடும் அளவிற்கு நீர்வள ஆதார மேலாண்மை மேம்படுத்திடவும், நீர்பயண்பாட்டை முறையாக ஒழுங்கு படுத்தவும், தற்போது இத்திட்டம் தொடங்கப்பட்டு, இச்சீரமைக்கும் பணி 14.03.2017 முதல் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொதுப் பணித்துறையின் மூலம் 50 நீர்வரத்துக் கால்வாய்கள், ரூ.231.51 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நொய்யல், பவானி, ஆழியாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் சிற்றருவிகள் ஆகியவற்றிலுள்ள முதன்மை வாய்கால்களிருந்து வரும் துணை கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் மூலம் இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் 1,29,137 ஏக்கர் பாசனப்பகுதிகளுக்கு நீர்தேக்கி பயன்படுத்தும் நிலை உறுவாகும். தற்பொழுது வடசித்தூர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் 2963 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு நீர்நிலை வாய்க்கால்களை சீர்செய்வதன் மூலம் தண்ணீர் வரத்துப்பகுதியிலிருந்து கடைமடை வரை நீர் சேதாரமின்றி சமச்சீராக வருவதன் மூலம் ஆங்காங்கே உள்ள சிறு குளங்கள் ஏரிகளுக்கு தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள மிகப்பயணுள்ளதாக இருந்திடும்.

இதேபோல், மாவட்டத்தில் மற்றப்பகுதிகளிலுள்ள அனைத்துக் கால்வாய்களும் விடுபடாமல் சீரமைக்கப்படும். 

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் மூலமாகவும், பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அதே வேலையில், நீர்நிலை ஆதாரங்களை நிலை நிறுத்த ஏதுவாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் சுமார், 250 கி.மீ தூரத்திற்கு ரூ.170லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக்கால்வாய்கள் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 49 கண்மாய்களில் வரும் மழை காலத்தில் தண்ணீர் தேக்கி விவசாயப்பணிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் நிலை உறுவாக்கபட்டுள்ளது. இதேபோல், நடப்பு நிதியாண்டில் மற்றப்பகுதிகளிலும் நீர்வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்படும்.

எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை ஆழியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளர் முத்துச்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...