உடுமலை அருகே புத்தர் கோவில் கட்ட இடையூறு- மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர் நேரில் ஆய்வு

புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது என புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சிலர் அந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களிடம் கடந்த மாதம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுமானபணிகள் தடை படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் கூறியதாவது, புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்து கட்டுமான பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் பிக்கு மெளரியா புத்தா நிலையமுத்தூர் அருகில் புத்தர் கோவில் பார்வையிட்டால் அப்போது புத்தர் கோவில் கட்டுவதில் இடையூறாக இருப்பதாக மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு வந்த நிலையில் இன்று ஆய்வுக்கு வந்துள்ளோம்.

இங்கு வந்து பார்த்தபோது கோவில் கட்டுவதற்கு இடையூறு இருப்பதாக தெரியவில்லை. கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...