அடிப்படை வசதி செய்துதரக்கோரி காரமடை அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை

பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை எனம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பநகர் அடுத்த அம்பேத்கர் நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் மக்களுக்கு பட்டா அளித்து நான்கு வருடம் ஆயிற்று. இருப்பினும் இன்று வரை இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என்று இங்கு வாழும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்.19) அந்த பகுதியில் வசிக்கும் ஊர் மக்களில் ஒருவரான சுமித்ரா என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாததால் பலரும் இங்கு வந்து மது அருந்துகின்றனர்.

இந்த பகுதி அருகே கல்லுக்குழி இருப்பதால் அங்கு ஆண்கள் பலரும் மது அருந்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல முடிவதில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள் கீழே அடிக்கடி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.

இங்கு குடிநீர் வசதி இல்லை என்பதால், நல்ல தண்ணீர் 300 ரூபாய்க்கும், உப்பு தண்ணீரை ரூபாய் 700 ரூபாய்க்கும் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களை 7 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்தால், உங்கள் ஊர் இருட்டாக உள்ளது எனக் கூறி அவர்கள் வருவதில்லை.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அரசாங்கத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். பின்னர் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கோரிக்கை வைத்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...