கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எபிவிபி அமைப்பு மனு

கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர் என்று எபிவிபி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதால் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருவதால் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ், கோவை மாவட்டத்தில் அதிகளவில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர்.



இதனால் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து எதிர்காலத்தை வீணாக்குகின்றனர். தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் போதை பொருட்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அலட்சிய போக்கால் நாளுக்கு நாள் போதை பொருள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...