மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அதிமுக அடகு வைத்து விட்டது – கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் கோவையை காக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார் என்றும், தமிழக முதல்வர் தனது சக்திக்கு மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறார் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


கோவை: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மேடையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 3 நாட்கள் திமுகவின் 68,000 பாக முகவர்களுக்கும், 6,80,000 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான கூட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். பாசிசம் சரிய தொடங்குவதற்கு காரணம் ஸ்டாலின் என்றும், மாநில உரிமையை பற்றி தொடர்ந்து பேசி வருவதும் தான் காரணம். திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1339 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த அரசாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் மொழி அர்ச்சனை என கொண்டு வந்து, "சுக்னாபரதம்" என விநாயக சமஸ்கிரத துதியையும் பாடி, சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழ் தான் புரிகிறது.



ஆன்மீகத்திற்கு எதிரானது திமுக என பரப்ப பாசிசம் முயல்வதாகவும், திப்பு சுல்தானும், தீரன் சின்னமலையும் நண்பர்கள். அப்போதைய ஆங்கிலேயர்களை எதிர்க்க ஒன்றினைந்தது மாநில உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. இருப்பினும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முதல்வர் அழைத்தாலும் அவர்கள் துணிந்து வராமல், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி என்பதற்காக இல்லை, திமுக தொண்டர் அடிப்படையில், அவருக்கு துணையாக திமுக இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத்துறை, ஐடி-யை மத்திய அரசு ஏவி பார்க்கின்றனர். வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் கோவையை காக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் மாநில அரசால் கொடுக்கப்பட்ட அறிக்கையை வாசிக்க முடியாது என ஆளுநர் சொல்வதற்கு அதிகாரமில்லை, மிக் ஜாம் புயலில் இவ்வளவு நிதி தேவைப்படுகிறது. அவர்கள் தருவார் என நம்பிக்கையுடன் தான் தெரிவித்தும் தவறாக எதுவும் குறிப்பிடாத போதும் ஆளுநர் படிக்கவில்லை.

தமிழக முதல்வர் தனது சக்திக்கு மீறி செயல்பாட்டு கொண்டிருக்கிறார். கோவை தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கட்டிடமாக வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...