பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையினை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை கணபதி பகுதி 45-வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் அமைவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கடந்த 18 ஆண்டுகளாக கணபதி, 45-வது வார்டில் இயங்கி வந்த மதுபான கடை எண்: 1548 பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இந்த மதுபானக் கடை அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் வழிபாடு தலங்கள் உள்ள பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என போராட்டஙகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து மேற்குறிப்பிட்ட கடை அகற்றப்பட்டது. இக்கடையினால், இதுவரை வாகன விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழிந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கு மதுபான கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...