பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பிப்.18ம் தேதி உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டம் - திருச்சி சிவா பங்கேற்பு

நாளை நடைபெறயுள்ள உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.



அதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் அறிவித்த இந்த கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக முதல்வர் அறிவித்த இந்த உரிமைமீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதில் மாநில, நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஏர்பேர்ட் ராஜேந்திரன், மு.க.முத்து, அமுதபாரதி, நகர மன்ற தலைவர் சியமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...