பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பிப்.18ம் தேதி உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டம் - திருச்சி சிவா பங்கேற்பு

நாளை நடைபெறயுள்ள உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.



அதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் அறிவித்த இந்த கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக முதல்வர் அறிவித்த இந்த உரிமைமீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதில் மாநில, நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஏர்பேர்ட் ராஜேந்திரன், மு.க.முத்து, அமுதபாரதி, நகர மன்ற தலைவர் சியமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...