அதிமுகவுக்கு நிரந்தர எதிரி திமுக தான் - கோவையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து குடிநீர் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை, அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது.

அதே நடைமுறையை திமுக பின்பற்ற வேண்டும். அதிமுகவை பொருத்தவரை திமுக என்ற கட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு திமுக நிரந்தர எதிரி தான் என்று தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...