உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை ஊராட்சி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திறந்தவெளி கிணற்றில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(35)என்பவர் தவறி விழுந்து விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரா.லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் குரல்குட்டைக்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் குரல் குட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...